Sunday, August 12, 2018

www.supremeholisticinstitute.com
அகத்தியர் ஞானம் - 30

பாடல் - 13

சாகாதகாலை நன்றாய்  காணவேணும்
தணல்வேகாததலையறிந்து   கூடவவணும்
போகாதபுனலறிந்து   வுண்ணவேணும்
பொருளறிந்தசற்குருவைபோற்றவேணும்
வாகாகமூன்றரையுந்  தன்னுக்குள்ளே
வகைதெரியலட்சியத்தை  வணங்கிக்கேளு
ஆகாதுவொன்றுமில்லை  யெல்லாமாகும்
அதைரியமிலாப் பேருக்குஞ் சகலசித்தி

பொருள் -- பாடல் 13

சாகாத கால் என்ற மரணமில்லா பெரு வாழ்வு தரும் வாசியோகம் அறிந்து செய்யவேண்டும்

மூன்று தீ சேர்ந்து உருவாகிய பூரணம் என்ற நெருப்பை  உருவாக்கி அனலில் வெந்து போகாத தலை உருவாக வேண்டும். அமிர்தம் என்ற போகப்புனல் என்ற அமிர்த நீர்அருந்த வேண்டும். இதெல்லாம் ஆகாது என்று அதைரியப்படாதே . ஆகாதது எதுவும் இல்லை .இதை லட்சியமாக கொள் . இந்த வாசி யோகம் செய்து அறிந்த சற்குருவை வணங்கிக் கேட்டு தெரிந்து செய்.

No comments:

Post a Comment