Monday, March 11, 2019

21600, Breathings per day

www.supremeholisticinstitute.com

கேள்வி - மூச்சை உடலில் உள்ள சக்கரங்களில் நிலை நிறுத்தி தியானம் செய்வது எப்படி ?

பதில் - மனம் எங்கு செல்கிறதோ அங்கு பிராணனின் திணிவு ஏற்படும். உடலில் மனதைக் கொண்டு போய் எந்த இடத்தில் நிலை நிறுத்துகிறோமோ அந்த இடத்திற்கு பிராணன் செல்லும். நாம் சுவாசத்தின் மூலம் இடைவிடாது பிராணனைப் பெற்றுக் கொள்வதால், அந்த இடத்திற்கு சுவாசத்தின் தொடர்பு ஏற்படும். சிலர் வெளியில் கூட தங்கள் பிராண சக்தியை செலுத்தி பல அற்புதங்களை நிகழ்த்துவதுண்டு. அதற்கு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அது போலவே நாம் விரும்பிய ஆதாரச் சக்கரங்களில் மூச்சை செயல்படுத்துவதற்கும் பயிற்சி மேற் கொள்ள வேண்டும். முதலில் மூச்சைக் கட்டுப்படுத்திப் பழக வேண்டும், பிறகு மனதை ஒரு நிலைப்படுத்தி வெற்றி பெற வேண்டும். அதற்குப் பிறகுதான் சூக்கும நிலைகள் பற்றிய விழிப்புணவைப் பெற முடியும். அந்த நிலையில் சக்கரங்களில் மூச்சை நிறுத்தி தியானம் செய்வது சாத்தியமாகும்.

''நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு
நலமான சுவாசந்தான் எழுந்திருக்கும்
கோளொன்றி பதினாலாயிரத்து நானூறு
குவித்த மூலாதாரத்துள் ஒடுங்கும்,
பாளொன்றி ஏழாயிரத்தி இருநூறு சுவாசம்
பாழிநிற் பாய்ந்திடும் மென்றறிகப் பின்னை
ஏளொன்றி இதனையே உட்சுவாசித்தால்
எப்போதும் பாலனாய் இருக்கலாமே!!!'' - யூகிமுனி

நாள் முழுவதும் நாம் விடும் மூச்சில் மூன்றில் ஒரு பகுதி உடலின் மூலாதாரத்தை அடையாமல் வீணடிக்கப்படுகிறது. அந்த வீணடிக்கப்படும் மூன்றில் ஒரு பகுதியையும் வீணாக்காமல் சுவாசிப்பதற்கே சுவாசக்க கலை எனப்படும் யோகக் கலை தேவைப்படுகிறது. நம்முடைய சுவாசம் இட கலையிலிருந்து , பிங்கலைக்கும், பிங்கலையிலிருந்து, இடை கலைக்கும் இயல்பாக மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு மாறி மாறி சுவாசம் நடந்து கொண்டிருப்பதற்கிடையே ஒரு இடைவெளி ஏற்படுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் சுழுமுனை நாடி வேலை செய்கிறது. சுழுமுனை நாடி வேலை செய்யும் அந்த இடைவெளிதான் சிதம்பர ரசசியம் எனப்படுகிறது. குறிப்பிட்ட இந்தச் சொற்ப நேரத்தில் எண்ணங்கள் இல்லாமல் மனம் இயல்பாகவே சூன்ய நிலையை, வெட்ட வெளி நிலையை அடைகிறது. இந்த வெற்றிடத்தைத் தரிசிப்பவர்களுக்கு, அந்த நிலையிலேயே நீடித்திருக்க முடிந்தவர்களுக்கு மரணத்தை வெல்லும் சித்தி வாய்க்கிறது. ஒரு நாளைக்கு நடக்கக் கூடிய 21,600 சுவாசத்தில் 3000 சுவாசங்கள் இந்த சுழுமுனையில் நடக்கிறது.

ஒவ்வொரு ஆதாரங்களிலும் தினமும் நடக்கும் சுவாசம்.
மூலாதாரம் காலை - 06.00 மணி முதல் 06.30 வரை 600 சுவாசம்.
சுவாதிட்டானம் காலை - 06.30 மணி முதல் மதியம். 1.30 வரை 6000 சுவாசம்.
மணிபூரகம் மதியம் - 1.30 மணி முதல் இரவு 8 மணி வரை 6000 சுவாசம்.
அனாகதம் இரவு - 8.00 மணி முதல் அதிகாலை 2.30 வரை 6000 சுவாசம்.
விசுக்தி அதிகாலை - 2.30 மணி முதல் 3.45 வரை 1000 சுவாசம்.
ஆக்ஞை அதிகாலை - 3.45 மணி முதல் 04.50 வரை 1000 சுவாசம்.
சகஸ்ராரம் அதிகாலை - 4.50 மணி முதல் காலை 06.00 வரை 1000 சுவாசம்.

ஆக மொத்தம் 21.600 சுவாசங்கள் முறையே நம் ஆதாரங்களில் தினமும் காலந்தவறாமல் நடைபெறுகின்றன. அந்தந்த ஆதாரங்களில் சுவாசம் நடைபெறும் பொழுது, மனதை அந்தந்த ஆதார மையங்களில் வைத்து, அவற்றிற்குரிய பீஜ மந்திரங்களை உச்சரித்து தியானித்து வர வர சக்கரங்களின் இயக்கம் உணர்விற்கு வரும். பிறகு நாம் விரும்பிய மையங்களில் மனதைச் செலுத்தி, சுவாசத்தை இயக்கும் ஆற்றலைப் பெறலாம்.

Friday, September 28, 2018

Vasi yoga Meditation secrets

www.supremeholisticinstitute.com
ௐ சொல்லி, புருவ மத்தியில் கவனத்தைக் குவித்து, தவமிருந்து பழகுபவர்களுக்கான, ரூட் மேப் இந்தப் பதிவு ஆகும்!

டிரைவிங்,ரோடுகளில் செய்யும் போது, அந்த ரோட்டைப் பார்த்துதான் வண்டி ஓட்டுவோம்! வண்டியும் நேராகத் தடுமாறாமல் லாவகமாக ஓடும். கொஞ்சம் பக்கவாட்டில் திரும்பி ஒரு வினாடி வேடிக்கை பார்த்தாலும், வண்டி தன் நேர் போக்கிலிருந்து விலகி சிறிது அங்குமிங்குமாக அலம்பி, அதன் பின் நேராவதை நாம் எல்லோரும் அன்றாடம் அனுபவிப்பதுதான். யாராவது பின்னால் உட்கார்ந்திருந்தால்,  "நேராக ரோட்டப் பாத்து ஓட்டேம்ல" என்று கூறுவதையும் அனுபவப் பட்டிருக்கின்றோம்! அதேதான் தவத்தின் போதும்!

வண்டிக்கு, பார்த்து ஓட்ட ரோடு இருக்கிறது! தவத்தை எதைப் பார்த்து செய்ய? என்றால், அதற்கு ரோடு "முச்சுதான்"!

பாட்டிலில் புணலை வைத்து அதில் முதன் முதலாக எண்ணெயை ஊற்றும் போது, புணலின் சுவர் முழுவதும் நிறம்ப சொழ சொழவென ஊற்றுவோம்! நாட்கள் செல்லச் செல்ல, எண்ணெயை புணலில் படாமலே நேராக பாட்டிலுக்குள் சத்தமே வராமல் மெல்லிய நூலிழைப் போல ஊற்றி முடிக்க முடியும். அதே போல,

ஆரம்ப கட்ட சாதகர்கள், ஓம் ஊச்சாடனையின் போது, அந்த ௐ மும், மூச்சும் ஒன்றோடொன்று முட்டி மோதி, அசௌகரியத்தை உண்டு பண்ணுவதைக் கண்டு உற்சாகம் இழப்பர்! இந்த மோதல்களினால், முதுகு கழுத்துகளில் cramps உண்டாகி வலிக்கவும் செய்யும். அதற்காக, எழுந்து ஓடிறக் கூடாது! தினம் தினம் பயிற்சியை, செய்து வர வர, மூச்சிற்கும், ௐ மிற்கும் ஆன பரஸ்பர தொடர்பு புரிய வரும்! இரண்டும் முட்டாமல் மோதாமல் லாவகமாக தத்தமது ரூட்டை ஒன்றின் பின் ஒன்றாக அமைத்துக் கொள்ளும்! பாதி திறந்த கண் இமை சட சடக்காமல் இப்போது பாதி திறந்த நிலையிலேயே தன்னை தக்க வைத்துக் கொள்ளும். புருவ மத்தியில் வைத்த கவனமானது அங்கே ஒரு அழுத்த உணர்வைப் பதித்திருக்கும்! இவ்வளவும் நடந்தேறிய பிறகு உடல் இனி வலிக்காது. Cramps உருவாகாது. இப்போது உடல் ஒருவிதமான அனாயசமான சுகத்தில் திளைத்து ஆடாமல் அசையாமல், காற்றடிக்காத அறைக்குள்ளே வைத்த தீப சுடர் ஆடாமல் அசையாமல் வரைந்த ஓவியம் போல் சலமற்று இலவதைப் போல இலங்கும்!

இதோடு தவம் முடிந்ததென பாயை சுருட்டியவர்கள் நிறைய பேர் உண்டு!

ஆனால் இந்த நிலையானது, நாம் தவத்தை மேலும் இறைவனை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான பாதையில் இப்போதுதான் வைக்கப் பட்டிருக்கின்றோம் என்பதற்கான அறிகுறி ஆகும்!

இனி, முச்சிற்காச்சி, ௐமிற்காச்சி!

ௐ உச்சாடனை இப்போது சரியான இடைவெளிகளில் சரியான சந்தங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில்,

மூச்சின் உள்ளிழுப்பு மிகச் சன்னமாக மாறி, ஒரு நூல் அளவிற்குப் பருமன் குறைந்து, உள்ளே போய்க் கொண்டே இருக்கும். அதற்கு ஈடு தரும் விதமாக வயிறும் உப்பி உப்பி வெடிக்கும் அளவு பெரிதாகி வரும். அதைக் கண்டு பயந்து போய் ௐ சொலவதை நிறுத்தி விடாதீர்கள். உள்ளே சென்று கொண்டே இருந்த மூச்சு இப்போது நின்று விடும். வயிறு உப்பியே இருக்கும். இப்போதும் ௐ உச்சாடனையை நிறுத்தி விடாதீர்கள். அதை அதே லயத்தில் பதற்றமில்லாமல் செய்த வண்ணம் இருங்கள். இப்போது நின்ற மூச்சி அதுவாகவே வெளியேற ஆரம்பிக்கின்றது. அதே போல் சன்னமாகவும், நூலிழை போன்றும் வெளியேறிக் கொண்டேயும் இருக்கும். வயிறு முழுமையாக உள்முகமாக நெஞ்செலும்பிற்குள் ஒட்டி, வயிறு இருந்த இடம் பெரிய பள்ளமாகி விடும். இப்போதும் பயந்து விடாதீர்கள். ௐ மை விட்டுவிடக் கூடாது. முழு மூச்சும் வெளியேறியவுடன், ஒட்டிய வயிறுடன் உள்ள நிலை சிறிது நேரம் நிலைக்கும்! மீண்டும் மூச்சு உள்வாங்கலானது அதே மாதிரி ஆரம்பமாகிறது!

இந்த சமயத்தில், உங்கள் மீது எறும்பு ஏறி, கொசு உட்கார்ந்து கடிக்கலாம். சட்டை செய்து விடாதீர்கள்.

இந்த மூச்சின் நிலைதான் பள்ளம் மேடில்லாத ரோடு ஆகும். No additional to and fro traffic. நீங்க மட்டும்தான். இந்த ரோட்டில் அந்த ௐ என்னும் வண்டியை ஓட்டியபடி செல்லுங்கள், செல்லுங்கள்,சென்றபடி இருங்கள்!

ஒருநாள், ஒருசமயம்;

சுகமாகவும் இனபமாகவும் ரோட்டில் ஓட்டிக் கொண்டிருக்கும் நீங்கள் முன்னறிவிப்பு எதுவுமில்லாமல், திடீரென நாலா பக்கமும் பிசிறி அடிக்கப் படுவீர்கள்! எங்கும், எல்லாத் திக்கும், அகண்டாகாரமாய் ஔியை மிஞ்சும் வேகத்தில் பரவி முடிந்து விடுவீர்கள்!

பாதி மூடியிருந்த கண்கள் அதுவாகவே முழுதும் திறந்து பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்கும். இறுக மூடியிருந்த கைவிரல்கள் விரிந்து கொள்ளும். ஸ்தம்பித்த நீங்கள் இப்போது புரியத் தொடங்குகிறீர்கள்.

புரிந்தவுடன்....

சடேரென எழுந்து, திமுக்கு திக்கா, திமுக்கு திக்காவென குதித்து பரவசத்தில் ஆட ஆரம்பிக்கிறீர்கள். பக்கத்தில் கிடக்கும் சேர், மேஜைக்கெல்லாம் முத்தம்தான் போங்கள்!

ஜீவனாக இருந்த நீங்கள் இப்போது ஜீவன் முக்தனாக புரமோசன் பெற்று விட்டீர்கள்!

எங்கும் வியாபித்த நீங்கள், "இனி வியாபித்தது வியாபித்ததுதான்" திரும்பி, மீண்டும் உங்கள் உடலுக்குள் மட்டும் அடங்கி இருக்க முடியவே முடியாது!

ௐ தத் சத் ௐ !!

🌅Sri Aadhi Shiva Guru 🌏

Thursday, September 27, 2018

Physical Body Transformation to Eternal Body

www.supremeholisticinstitute.com
Definition of ” Triple Deathless Bodies ”

Vallalar has thus told that a sathak can and is eligible to attain the above thru Penance , Compassion , beyond all by Love and Grace

” 3 deathless and Indestructible bodies ” :

1 Pure Body – Suththa Dhegam

2 Sound Body – Pranava Dhegam

3 Space Body – Gnana Dhegam

How to attain this??

Certainly thru Penance only – not thru external activities – ALL INTERNAL and Transformation and Inner RE Engineering

All possible thru Esoteric activities

1 Pure Body – Suththa Dhegam :

This is Atman Body – Light Body attained by PURE HEAT generated thru penance and SEMEN formed on 10 th aperture thru sathanas and formation of FULL MOON from which particles of Grace and Light descend on Body and converts this Opaque body into Light Body and Transparent Body

2 Sound Body – Pranava Dhegam

This is the second stage /level of body transformation and transfiguration

When the temp of the body still and further rised to Lakhs and lakhs – this body gets converted into ” Sound Body ” –

3 Space Body – Gnana Dhegam :

” When this body thru Grace Light is transfigured into Grace Atoms – it attains the final stage of transformation – Gnana Dhegam – Space Body – which has no shape at all

Our Body is transformed into ATOMS
This is what happened to Vallalars Body on 30.1.1874 inside the room when he locked

This is the process of dematerialisation of Human body to Light /Grace Bodies.

Dr.V.Suresh PhD.,
Shiva Guru Vasi yogam.

Eternality Secrets

www.supremeholisticinstitute.com
பாற்கடலை கடைய அமுதம் வருமா?
பைத்தியக்காரத்தனம்.

அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம்.வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம்-யப்பா முடியலடா சாமி.

இதைவிட ஒரு காமெடி என்னன்னா
அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்னுவோட அவதாரமாம்.அவ்ளோ பெரிய ஆமையை Discovery சேனல்ல கூட காமிக்கலையே.

 தேவர்களும்,அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து  இழுத்தார்களாம்.

அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம்.அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம்.சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம்.விஷத்த குடிச்சா சாமி சாகுமா?இல்ல அப்படி செத்தா அதுசாமியா?

அப்புறம் அமுதம் வந்துச்சாம் அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.

இப்படி ஒரு Fantacy கதைய Hollywood படத்துல கூட சொன்னதில்ல.இந்த கதையையெல்லாம் நம்பிக்கிட்டு இன்னமும் நீ சாமி கும்பிட்டுகிட்டு இருக்க.-இப்படி தன் இரவல் அறிவையெல்லாம் ஒன்று திரட்டி ரொம்ப பெரிய கஷ்டமான கேள்வியக் கேட்டு விட்டதாகவும் என்னை மட்டம் தட்டி விட்டதாகவும் இருமாந்திருந்தார் நண்பர் ஒருவர்(பாவம் சமீபத்தில்தான் பகுத்தறிவு பால்வாடியில் சேர்ந்திருப்பார் போல).

நான் நிதானமாக சொன்னேன் இந்த கலாச்சாரத்தில் சொல்லப்படுகின்ற கதைகள் எல்லாம் உருவகங்கள்.
மிகப்பெரிய தத்துவங்களை எல்லாம் குழந்தைக்கு கூட புரியும் வண்ணம் புனையப்பட்ட உருவகக்கதைகள் இவை.

இவற்றை கதையை அப்படீயே எடுத்துக்கொண்டு வாதிடுவது அறிவுடைமை ஆகாது.

அதனால் Encoding செய்யப்பட்ட உருவகங்களை Decoding செய்தால் போதும்.பொருள் அதுவாகவே விளங்கும்.

சரி.இப்போது இந்த பாற்கடல் கதையை Decode செய்கிறேன்.

பாற்கடல்-குண்டலினி சக்தி
மேருமலை-முதுகுத்தண்டு
வாசுகி பாம்பு-மூச்சுக்காற்று(உஷ் ...உஷ்னு சத்தம் வருதா)
தேவ,அசுரர்-இடகலை,பிங்கலை(நாடி)
ஆமை-ஐம்புலன்களையும் அடக்கி ஆளும்தன்மை
தொண்டைக்குழி-விசுக்தி
விஷ்னு-வாழ்வு
ஆலகாலவிஷம்-கபம்
அமுதம்-நித்ய வாழ்வு(மரணமில்லா பெருவாழ்வு)

அதாவது முதுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை,பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று சதா ஓடிக்கொண்டிருக்கிறது.
(இதைத்தான் சிவவாக்கியர் சங்கிரண்டையும்  தவிர்ந்து தாரை ஊதச் சொன்னார்)

ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி அதை ஆதாரமாகக் கொண்டு வாசி யோகம் மூலம் இடகலை ,பிங்கலை வழியே மாற்றி மாற்றி மூச்சுக்காற்றை இழுக்கும்போது(நாடி சுத்தி) நித்யப் பெருவாழ்விற்கான அமுதம் சுரக்கும் அதை உண்டவர்கள் தேவர்கள் போல மரணமில்லா பெருவாழ்வு அடைவர்.

ஆனால் இந்தப்பயிற்சியின்  போது அளவுக்கதிகமான கபமே முதலில் வெளிப்படும் ஆனால் பரம்பொருள் சிவனின் கருணையால் அந்த கபத்தை கலைத்துவிடும்.(சந்தேகம் இருப்பின் வாசி யோகம் பயின்றவரிடம் கேட்டு தெளிவு பெறலாம்)

என்று விளக்கினேன்.அவரும் பாவம் வேறொருவருக்கு பாடம் எடுக்க சென்றுவிட்டார்.விநாயகர் சக்தியின் அழுக்குருண்டையில் பிறந்தவராமே-என்று.

அவர் கிடக்கட்டும்.உங்களுக்காக (புரிந்து கொள்ள நினைப்போருக்கு)மேலும் சில உருவகங்களின் Decodings

ஒரே இறைவன்(இஸ்லாம்)-அத்வைதம்(Oneness)

சக்தி,சிவன்-துவைதம்(Duality)

பிதா,சுதன்,பரிசுத்த ஆவி-விசிஷ்டாதுவைதம்(கிறித்துவம்)
-உருவகம்

சும்மா இருந்தால் சிவம்(Static)
ஓயாமல் அசைந்தால் சக்தி(Dymnamic)
சக்தி இல்லையேல் சிவம் இல்லை-உருவகம்

திரிசூலம்-இச்சா சக்தி,கிரியா சக்தி,ஞான சக்தி யின் உருவகம்

கணபதியை(பூமி) சக்தி (Dynamic force)
அழுக்கை(Dust of universe )உருட்டி படைத்தாள்-இது பூமி தோன்றலின் உருவகம்

தில்லை நடராசர் நடனம்-Cosmic dance ன் உருவகம்(அறிவியல் ஏற்றுக்கொண்டது)

சிவன் (யோக சக்தி),திருமால் (போகசக்தி)
இவற்றின் கலவையான சக்தியே ஐயப்பன்-உருவகம்

முப்பரிமாணம் மட்டுமே உணரக்கூடிய மனித மூளைக்கு நாலாவது பரிமானமான காலத்தை உணர்த்த மகாகாலன்,அதன் எதிர்பரிமாணம் மகாகாளி-உருவகம்

பிறப்பை அருளும் தாயின் உருவத்தை மரணத்தை அருளக்கூடிய கோர உருவமாக காளியாகபடைத்தது ஜனனமும்,மரணம் இறைவனக்கு ஒன்றே என உணர்த்தும் உருவகம்

வாயு மைந்தன் அனுமன்(குரங்கு போன்ற நிலையில்லாதமனம் யோகம் பயின்றால் கடவுளாகும் தகுதி உண்டு என்ற தத்துவம்
-மனத்தின் உருவகம்

கருடாழ்வார்-மூச்சின் உருவகம்

சூரியனின் ஏழு குதிரைகள் நிறப்பிரிகை-VIBGYOR உருவகம்

தசாவதாரம் பரிணாம வளர்ச்சியின் உருவகம்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 ஆணும் பெண்ணும் சமம் என உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் உருவகம்.

எல்லாம் உணர்ந்தோர் ஏதும் உணராதோர்க்கு தான் உணர்ந்ததை உணர்த்த ,ஏதும் உணராதோர் உணர்ந்த தன்மையின் அடிப்படையில் தாம் உணர்ந்ததை(தத்துவத்தை) உருவகமாக்கி
உணர்த்தினர்.

நீங்களாவது உணர்ந்து கொண்டீரா?
உணர்ந்து கொண்டோர் பகிர்ந்து கொள்வர்.

🌍Shiva Guru Vasi yogam ☀

Knowing about your own Soul is first step for Eternality .

வணக்கம்
ஆத்மா சுயரூபம் எப்போது வெளிப் படுகிறது

மனம் அடங்கும் போதா? அல்லது மனம் விரிவு அடையும் போதா?

ஒவ்வொரு மனிதனின் மனம் அடங்கும் நேரம் அமைதி
மனம் விரிவு அடையும் நேரம் பிரபஞ்சத்தின் ஆற்றல் அதிகம் பிறக்கிறது

மனம் விரிவு அடையும் தருணம்
முக்காலமும் உணரப்படுகிறது

மனம் அடங்கும் நேரத்தில் தன்னைத்தானே
அறியச் செய்கிறது
இதில் முன் நடப்பவை பின் நடப்பவை அறியப் படுவது இல்லை

எப்போது மனம் முழுவதும் விரிவடையுதோ
அப்போது நாம்  யார் என்பதை உணர முடியும்

நாம் இங்கு இருந்து கொண்டு வேறு ஒரு இடத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என நடப்பதை யூகிப்பது மனம்தான்
அதை  உண்மை என்று ஏற்பதும் பொய் என்று மறுப்பதும் மனமே தான்

ஒரு காலத்தில் யூகத்தின் அடிப்படையில் வகுத்து கொண்டது தான் இன்று நாம் உண்மை என்று ஏற்றுக் கொண்டது

மனம் விரிவடைய விரிவடைய
நமக்கு பல விசயங்களில் தெளிவு பிறக்கிறது மனம் அடங்க அடங்க குழப்பமும் அடங்குகிறது

அப்படி விரிவு அடையும் மனம் நமக்கு பல
விதத்தில் தெளிவு தருகிறது
இந்த தெளிவே
நமது உடலில் இருந்து மனதை பிரிக்கவும்
சேர்க்கவும் உதவுகிறது
நாம் தியானத்தில் இருக்கையில் எவ்வளவு தெளிவு பெறுகிறதோ அவ்வளவு விரிவு அடைகிறது மனம்

இந்த விரிவே நாம் இந்த பிரபஞ்சத்தை உணர உதவுகிறது
மன ஆற்றலே மறுமையை உணர செய்கிறது
எத்தனை விரிவாக்கமோ அத்தனை அறிதல் --
Dr.V.Suresh.,PhD.
www.supremeholisticinstitute.com

Sunday, August 12, 2018

www.supremeholisticinstitute.com
அகத்தியர் ஞானம் - 30

பாடல் - 13

சாகாதகாலை நன்றாய்  காணவேணும்
தணல்வேகாததலையறிந்து   கூடவவணும்
போகாதபுனலறிந்து   வுண்ணவேணும்
பொருளறிந்தசற்குருவைபோற்றவேணும்
வாகாகமூன்றரையுந்  தன்னுக்குள்ளே
வகைதெரியலட்சியத்தை  வணங்கிக்கேளு
ஆகாதுவொன்றுமில்லை  யெல்லாமாகும்
அதைரியமிலாப் பேருக்குஞ் சகலசித்தி

பொருள் -- பாடல் 13

சாகாத கால் என்ற மரணமில்லா பெரு வாழ்வு தரும் வாசியோகம் அறிந்து செய்யவேண்டும்

மூன்று தீ சேர்ந்து உருவாகிய பூரணம் என்ற நெருப்பை  உருவாக்கி அனலில் வெந்து போகாத தலை உருவாக வேண்டும். அமிர்தம் என்ற போகப்புனல் என்ற அமிர்த நீர்அருந்த வேண்டும். இதெல்லாம் ஆகாது என்று அதைரியப்படாதே . ஆகாதது எதுவும் இல்லை .இதை லட்சியமாக கொள் . இந்த வாசி யோகம் செய்து அறிந்த சற்குருவை வணங்கிக் கேட்டு தெரிந்து செய்.

Friday, August 10, 2018

ஆன அஞ்சு எழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்சு எழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்சு எழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்சு எழுத்துளே அடங்கலாவ உற்றதே.
                         - சிவவாக்கியர்
ந - மண் பூதம்
ம - நீர்
சி - நெறுப்பு
வா-வாயு
ய - ஆகாயம்
பஞ்ச பூதமே அனைத்தும்.

ஓடி ஓடி ஓடி ஓடி உட் கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து   போய்
வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.

வெட்டவெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குக் பட்டயம் ஏதுக்கடி!
குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி
                       - குதம்பைச் சித்தர்


அணுமின் அணுவினை ஆதிபிரானை
அணுவில் அணுவினை ஆயிரம்
கூறிட்டணுவின் அணுவை அணுக
வல்லார்கட் கண்ட கணுவில்
அணுவை அணுகலாமே
                   - திருமூலர்


தன்மேனி நற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவமாய் நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாகந்
தன்மேனி தானா குந்நற்பரந் தானே!
                            - திருமந்திரம்

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர் வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தை சார்வீர் விரைந்து இனி இங்கு
என்மார்க்கமும் ஒன்றாமே.
                    - திருஅருட்பா


அன்பெனும் பிடியுள் அகபடும் மலையே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பேனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பர சிவமே.
                       - திருஅருட்பா

வந்ததிலும் போனதிலும்
மனதை வைய்யேன்
வந்ததும் போனதும் வாசியாகும்
                            - வால்மீகி சித்தர்

சென்றேனே உச்சிநீர் தாயேயாகும்
சிரசிலுள்ள நீரெல்லாம் வாலையாகும்தீயென்றால் மூலக்கனல் உச்சிவாசல்தீண்டிவிட்டு மேலேறிற் தீபசோதிசொல்லுமே கபாலத்திற் சேர்ந்தவாசிசோதியொளி கண்டிடுமே கனலாற்காலால்நில்லுமே மூலதலம் வாசிகொண்டு

நிமிர்ந்திருந்து பார்க்கவுமே பிடரியேறும்.


உச்சிக்கும் கீழாக நாவுக்கும் மேலாக வைத்த விளக்கும் எரியுதடி ,
அச்சுள்ள விளக்கு வாழையடி அதை அரியாமல் மனம் இருக்குதடி!

நந்த வனத்தில் ஒர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தானே ஒரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.


Shiva Raja yogi Dr.Suresh
Cell:+91 9884380229